search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி"

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ் கல்லீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #UPCMYogi #YogiAdityanathFather #AIIMS

    டேராடூன்:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத். இவரது தந்தை ஆனந்த் சிங் பிஷ். இவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், ஆனந்த் சிங் பிஷ்ஷுக்கு இன்று கல்லீரலில் கடும் வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை  மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என டாக்டர்க்ள் தெரிவித்தனர். #UPCMYogi #YogiAdityanathFather #AIIMS
    ×